கப்பல் ஓடிக்கொண்டிருக்கின்றது!



இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையில் முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை சீராக இயங்கிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவை வழமைப் போன்று முழு கொள்ளளவுடன் வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கப்பல் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளதான அறிவிப்பின் மத்தியிலேயே சேவை பற்றிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பமானது. என்றாலும், பின்னர் அச்சேவை இடைநிறுத்தப்பட்டு பின்னர் 2024 ஆண்டு ஒகஸ்ட் 16ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானது.

கப்பல் சேவயையை மேலும் மலிவாக்க, நாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை ஈடுகட்டுவதற்கு மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கை வழங்குகிறது.

கப்பல் ஊடாக இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளுக்காக விதிக்கப்படும் புறப்பாடு வரியை இலங்கை அரசாங்கம் குறைத்துள்ளது.


No comments