யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் வள்ளத்தில் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணத்தில் வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் வள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அராலி மத்தியை சேர்ந்த சி. நாகராசா (வயது 53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அராலியில் இருந்து கடற்தொழிலுக்காக வள்ளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கடலுக்கு சென்றவர் இன்றைய தினம் திங்கட்கிழமை வரையில் கரை திரும்பவில்லை. 

அதனை அடுத்து சக தொழிலாளிகள் மற்றும் உறவினர்கள் அவரை கடலில் தேடிய நிலையில் , பொன்னாலை கடற்கரை பகுதியில் அவரது வள்ளம் கரையொதுங்கி இருந்ததை கண்ணுற்று , அங்கு சென்ற பார்த்த போது , வள்ளத்தினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். 

அதனை அடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர் 

No comments