மாகாண சபைகளுக்கு எந்த வகையிலும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது


மாகாண சபைகளுக்கு எந்த வகையிலும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மொட்டு கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

அதேவேளை, நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டோம்.

மாகாண சபைகளுக்கு எந்த வகையிலும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது.

இந்நிலையில், அரச ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், சம்பள முரண்பாடுகள் களையப்பட வேண்டுமெனவும், இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தார். 

No comments