லெபனானில் மீண்டும் தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் சிறப்புப் படைகளின் தளபதி பலி!

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களில் ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவின் சிறப்புப் படைகளின் தளபதியாகப் பணியாற்றிய அகில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
Post a Comment