அமேசான் காடுகளின் அழிவு 15 மாதங்களில் முதல் முறையாக அதிகரிப்பு


பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு 15 மாதங்களில் முதல் முறையாக ஜூலை மாதம் உயர்ந்தது, ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் கீழ் வீழ்ச்சியடைந்த அழிவின் தொடர்ச்சியை முறியடித்தது என அரசாங்க தரவு காட்டுகிறது.

சுற்றுச்சூழல் ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் இது வந்துள்ளது.  

ஜூலை மாதம் 666 சதுர கிலோமீட்டர்  காடு பகுதி அழிக்கப்பட்டது. இது ஜூலை 2023 இல் அழிக்கப்பட்ட 500 சதுர கிலோமீட்டர் விட 33% அதிகம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் அறிவியல் அமைச்சகம் அறிவித்த பூர்வாங்க தரவு காட்டுகிறது.

கடந்த 12 மாதங்களில் காடழிப்பு கிட்டத்தட்ட 46% குறைந்துள்ளது. முந்தைய இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது. சுமார் 4,300 சதுர கிலோமீட்டர்கள் கேப் வெர்டேயின் அளவை விட பெரியதை இழந்தது.

2030 ஆம் ஆண்டிற்குள் அமேசானில் காடழிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக  ஜனாதிபதி லுலா ட சில்வா உறுதியளித்துள்ளார்.

தென் அமெரிக்காவின் கிட்டத்தட்ட 40% பகுதியை உள்ளடக்கிய அமேசானில் , காடழிப்பு பொதுவாக விவசாய விரிவாக்கம் மற்றும் சட்டவிரோத சுரங்கத்துடன் தொடர்புடையது. லூலா டி சில்வாவின் முன்னோடியான ஜெய்ர் போல்சனாரோவின் கீழ் இது கடுமையாக அதிகரித்தது.

ஜூலை 2024 இல் அதிகரிப்பு ஓரளவுக்கு காரணம், ஜூலை 2023 இல் மழைக்காடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளது. மற்ற காரணங்களில் அமேசானில் வறட்சி, இந்த ஆண்டு நடைபெறும் நகராட்சித் தேர்தல்கள் மற்றும் ஜூன் மாதம் தொடங்கிய சுற்றுச்சூழல் ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஆகியவை அடங்கும் என்று பிரேசிலிய சுற்றுச்சூழல் துணை அமைச்சர் ஜோவா கபோபியான்கோ கூறுகிறார்.

No comments