பின்வாங்கினார் தம்மிக்க!
தனிப்பட்ட காரணங்களுக்காக பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாற்று வேட்பாளரை பெயரிட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது .எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சியின் வேட்பாளராக பெயரிடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தனது வேட்புமனுவை 'தனிப்பட்ட காரணத்தை' சுட்டிக்காட்டி நிராகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஹெய்லிஸ் குழுமம் மற்றும் சம்பத் வங்கி உள்ளிட்ட அவரது வணிக நலன்கள் தேவையற்ற வரி சோதனைக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.
Post a Comment