திருமலையில் கடத்தப்பட்டவர் எரியூட்டிக்கொலை?
திருகோணமலையில் கடத்தப்பட்ட தமிழர் வர்த்தகர் ஒருவர் வாகனம் ஒன்றுடன் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், செல்வநாயகம்புரம் பகுதியை சேர்ந்த ஜெயரூபன் (வயது - 42) என தெரியவந்துள்ளது.
முன்னதாக உயிரிழந்தவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக திருகோணமலை உப்புவெளி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயரூபனை வீட்டிலிருந்து நபரொருவர் வெள்ளிக்கிழமை (12) அதிகாலை 2 மணியளவில் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் அவர் தாக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் அவர், காணாமல் போனதாகவும் குடும்பத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தப்பிச்சென்ற இரு சந்தேக நபர்களை தேடி வருவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
Post a Comment