போர் வெற்றி:கைவிடப்பட்ட சிங்கள இராணுவம்!



சிங்கள இராணுவத்தை கைவிட்டுள்ள ஆட்சியாளர்கள் தொடர்பில் படைத்தரப்புக்கள் சீற்றமடைந்துள்ளன.

இலங்கைத்தீவில் முழுமையாக அங்கவீனமுற்ற சிங்கள இராணுவத்தினர் சுமார் 14,500க்கும் அதிகமானோர் காணப்படுகின்றனர்.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் பூர்த்தியடைந்தாலும் குறித்த சிங்கள இராணுவத்தினர் பிரச்சினைகளுக்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கவில்லை குற்றச்சாட்டுக்கள் முன்iவைக்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் அங்கவீனமுற்ற சிங்கள இராணுவத்தினில் நடைமுறையின்றி சுமார் 50 ஜெனரல்கள் சம்பளம் பெற்று வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற 55 வயதுக்கு முதல் உயிரிழந்த 386 சிங்கள இராணுவத்தினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை கடந்த காலங்களில் இடைநிறுத்தி வைத்ததாகவும், அதனை எடுத்துக் கூறிய பின்னர் 68 பேருக்கு மாத்திரம் சம்பளம் வழங்கப்படினும் ஏனையோருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 

சில அங்கவீனமுற்ற சிங்கள இராணுவத்தினரின்; குடும்பத்தினர் சரியான உணவுகளின்றி காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.


No comments