வாயே திறக்கமாட்டேன்:சாணக்கியன்
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. அது ஒரு சட்ட ரீதியான விடயமாகும் .அதன் அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார் இரா.சாணக்கியன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சேனாதிராஜா, கட்சியின் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்திருந்தார். உண்மையிலேயே கட்சியின் கூட்டங்களை நடாத்துவது, அதனை ஒத்திவைப்பது தொடர்பான அதிகாரங்கள் பொதுச் செயலாளருக்குத்தான் உண்டு. திருகோணமலையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு பதில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய சத்தியலிங்கம் வருகை தராத காரணத்தினால் கட்சியின் யாப்பின் பிரகாரம் இரண்டாவது துணைச் செயலாளர்; எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.
எனவே கூட்டத்தை நடாத்துவது. அதனை ஒத்தி வைப்பது தொடர்பான அதிகாரம் பதில் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. அது ஒரு சட்ட ரீதியான விடயமாகும் .அதன் அடிப்படையில் கூட்ட தீர்மானம் என்ன என்பது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நான் அறிகின்றேன். அதற்குரிய கடிதத்தையும் நான் பார்த்திருந்தேன். அவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தால் உட்கட்சி முரண்பாடுகள் வருமெனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Post a Comment