ஊழ்வினை தெற்கையும் உறுத்துகிறது
வடகிழக்கில் மனித உரிமை மீறல்களை செய்த முப்படைகளினையும் காவல்துறையினையும் நியாயப்படுத்திய சிங்கள தேசம் அதற்கான வலிகளை சுமக்க தொடங்கியுள்ளது.
இனிவருங்காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வாகன சோதனையில் ஈடுபட முடியாது என இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லொறி சாரதி ஒருவர் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதான லொறி சாரதி, சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, சோதனைச் சாவடியில் சோதனைக்காக வாகனத்தை நிறுத்த அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்க்கத் தவறியதற்காக சிவில் உடையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் லொறியைப் பின்தொடர்ந்தனர்.
மோட்டார் சைக்கிளில் லொறியைத் துரத்திச் சென்ற அவர்கள், வாகனத்தை நிறுத்தியுள்ளனர், அதன் பின்னர், சாரதியை நெருங்குவதற்கு முன்னர், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் தனது ஆயுதத்தை எடுத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் (SI) கைது செய்யப்பட்டு 2024 ஜனவரி 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதேவேளை குறித்த அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment