இலங்கை கிரிக்கெட் சபை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.




இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால குழுவை நியமித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அமைச்சரினால் இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கிரிக்கெட் சபை அதற்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

No comments