பேர்லின் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்ட 2 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி


யேர்மனி தலைநகர் பேர்லினில் இரு மாணவிகள் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது. இச்சம்பவம் நேற்றுப் புதன்கிழமை பேர்லினின் நியூகோல்ன் பகுதியில் நடந்ததாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

தாக்குதல் நடந்த இடத்தில் சந்தேகத்தின் பெயரில் 39 வயதுடைய ஆண்டு கைது செய்யப்பட்டார்.

கத்திக்குத்துக்கு இலக்காகிய 7 மற்றும் 8 வயதுடைய சிறுமிகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் சிகிற்சை பெறுகின்றனர்.

இந்த நினைத்துப் பார்க்க முடியாத செயலால் அதிர்ச்சியடைந்தேன் பேர்லின் மேயர் காய் வெக்னர் கூறினார்.

இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் காயமடைந்த இரண்டு சிறுமிகளுடன் உள்ளன என்று அவர் ட்விட்டரில் கூறினார். அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என அப்பதிவில் அவர் குறிப்பிட்டார்.

No comments