கொலையாளி ஜெர்மனிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்!



நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு கொலையாளி ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே என தெரியவந்துள்ளது.

அவர் பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும்; மீட்கப்பட்டுள்ளன

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

சுமார் 100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நெடுந்தீவில் நடமாடிவிட்டு கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்திருந்தனர்.

இதனிடையே நெடுந்தீவு பிரதேச செயலக முன்றலில் நெடுந்தீவு மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்தை தொடர்ந்து நெடுந்தீவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் விழிப்பு குழுக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் பல கோரிக்கைகளையும் முன்வைத்து பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



No comments