ஹஷிஸ் மேலும் இலங்கை வந்தது!



மன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் ஹஷிஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களுடன் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்திய பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் கடற்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான படகை பரிசோதித்துள்ளனர்.

இதன்போது, குறித்த படகில் 3 பைகளில் 95 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த ஹஷிஸ் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கையிருப்புடன் கூடிய படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

No comments