மார்ச் 09 தேர்தல் நடக்காது ; 3ஆம் திகதி புதிய திகதி அறிவிக்கப்படும்!


தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

No comments