வெளிநாடு செல்ல முற்பட்ட 67 பேர் கடலில் கைது!


இலங்கையிலிருந்து கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 67 பேரை இலங்கை கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கல்முனை கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 67 பேரை ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை படையினர் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இழுவைப்படகும் கையகப்படுத்தினர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 06 கடத்தல்காரர்கள், 06 பெண்கள் மற்றும் 08 சிறுவர்கள் உட்பட 53 ஆண்களும் அடங்குவர். 

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக காவல்துறையினடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments