யாழில் சுற்றுலா பாய்க்கப்பல்



 சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர ரக கப்பலில் ஒருநாள் மற்றும் சிலநாட்கள் கடலில் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சேவை பரீட்சார்த்தமாக டிசம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் காரைநகரில் இருந்து இதனை இந்த மாதத்தில் ஆரம்பிக்க இருந்தோம். காலநிலை காலநிலை மாற்றம் காரணமாக டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கவுள்ளோம். 


இதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரித்து நாட்டிற்கு வருமானம் ஈட்டப்படுவதுடன் உள்ளூர்வாசிகளும் பயன்பெறுவர் என்றார்.

No comments