வெள்ளை நிறத்தில் பிறந்தது இரு சிங்கக்குட்டிகள்


ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்தன. 

பிறந்து எட்டு நாட்கள் ஆகும் சிங்கக்குட்டிகளில் ஒன்று ஆண் மற்றது பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கக் குட்டிகள் அண்டலூசியா பகுதியில் உள்ள மலைக் கிராமமான ஜிமெனா டி லா புரோன்டெராவில் உணவளிப்பதற்காக சிறப்பு அறைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டன.

இந்த சிங்கக்குட்டிகளின் பெற்றோர்கள் சாதாரண ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆகும். எனவே அவைகளிடம் இருந்து வெள்ளை சிங்கங்கள் பிறந்துள்ளது விலங்கியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகளாவிய வெள்ளை சிங்கங்கள் பாதுகாப்பு அறக்கட்டளை, இந்த விலங்குகள் அல்பினோக்கள் இல்லை என்றும் இவை தென்னாப்பிரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில் உள்ள கிரேட்டர் திம்பாவதி பகுதியின் அரிய மரபணு என கூறியுள்ளது.

1930 களில் வெள்ளை சிங்கங்கள் இனப்பெருக்கத்திற்காகவும் வேட்டைக்காகவும் காடுகளில் இருந்து அகற்றப்பட்டு சிறைபிடிக்கப்பட்டன. தற்போது 13 க்கும் குறைவான வெள்ளை சிங்கங்களே அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வாழ்கின்றன என கூறப்படுகிறது. வெள்ளை சிங்கங்கள் பாந்தெரா லியோ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

No comments