யாழில் விபத்து! உந்துருளியில் பயணித்த பெண் பலி!!


யாழ்ப்பாணம், கோப்பாய் - கைதடி வீதியில் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த இளம் குடும்பப்பெண் பரிதாபமாக

உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றது.

கணவரும் மனைவியும் உந்துருளியில் கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து, 100 மீற்றர் தூரத்தில்  சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் உந்துருளியை உரசியதால் உந்துருளி சரிந்துள்ளது.

சம்பவத்தில் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளம் குடும்பப் பெண் வீதியில் வீழ்ந்து தலைப்பகுதியில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments