நாவற்குழியில் படைச்சிப்பாய் சுட்டுத்தற்கொலை!!


யாழ்ப்பாணம் நாவற்குழி தெற்கில் அமைந்துள்ள கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் இன்று அதிகாலை (22.0.2021) கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

படைமுகாமில் தற்கொலை செய்துகொண்ட சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ காவல்துறையினர் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments