நீதி கோரி பொலிஸிடம் போன தமிழ் புள்ளிகள்!



இலங்கையின் சட்டங்களில் நம்பிக்கையில்லையென்ற அரசியல் புள்ளிகள் பலரும் இன்று காலை முதல் முல்லைதீவு இலங்கை காவல்துறை அலுவலகம் முன்காத்திருந்த பரிதாபம் அரங்கேறியிருந்தது.முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் .

நடுகை செய்வதற்காக நேற்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு பாரிய நினைவுக்கல் ஒன்று இறக்கி வைக்கப்பட்டது.அப்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸார் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 


நினைவுக்கல் கொண்டுவந்து இறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு படையினர் மற்றும் பொலிசார் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு நினைவேந்தல் கட்டமைப்பினை சேர்ந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் அங்கு எந்த பணிகளும் செய்யக்கூடாது என அறிவித்துள்ளனர்.  இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்கள் சென்ற நிலையில் நேற்று இரவு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி இராணுவத்தின் பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரவு பொலிஸார் குறித்த பகுதியில் இல்லாது இராணுவத்தினர் பாதுகாப்பில் இருந்துள்ளனர். நேற்றிரவு பத்து மணியளவில் குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் சிலர் செல்ல முற்படுத்த போதும் இராணுவத்தால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் பொலிஸாரை அழைக்குமாறு ஊடகவியலாளர்கள் கோரிய போது அங்கு பொலிஸார் இருக்கவில்லை.  முற்றுமுழுதான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் குறித்த பகுதி கொண்டுவரப்பட்டிருந்த நிலைமையிலேயே இரவோடு இரவாக புதிதாக கொண்டு வரப்பட்ட நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நினைவு சின்னம் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இன்று காலை நீதி கேட்டு இலங்கை காவல்துறை முன்னதாக காத்திருந்தனர் தமிழ் அரசியல் புள்ளிகள்.


No comments