இலங்கை :ஆயிரத்தை தாண்டியது!



 கொரோனாத் தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் நாளொன்றில் ஆகக்கூடிய கொரோனா மரணங்கள் நேற்று (18) பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (18) மேலும் 2518 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 147,720 ஆக அதிகரித்துள்ளது.


No comments