ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து?


மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிட்டது.

எனினும் ஆசனப் பங்கீட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது. இந்நிலையிலேயே, மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

No comments