கொரோனா பரவல்! நியூசிலாந்துப் பொதுத் தேர்தல் தள்ளிவைப்பு!

நியூசிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

நான்கு வாரங்களுக்கு அதாவது வரும்  அக்டோபர் 17 ஆம் திகதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை கைவிட்டது. இதையடுத்து, தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். 

120 உறுப்பினர்களை கொண்ட நியூசிலாந்து பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments