மைத்திரிக்கு தொடரும் தலையிடி?



ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

முன்னதாக வாக்குமூலமளிக்க மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் தனது வீட்டிற்கு வருகை தந்து வாக்குமூலத்தை பதிவு செய்ய அவர் கோரியிருந்தார்.

புதிய அமைச்சரவையில் கனதியான பதவியை எதிர்பார்த்திருந்த போதும் ஏதுமின்ற கைவிடப்பட்ட மைத்திரி தற்போது மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக சஜித் தரப்புடன் கூட்டு சேர எதிர்பார்த்துள்ளார்.

அதற்கான திரைமறைவு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் மைத்திரியினை முடக்க கோத்தா அரசு மும்முரமாகியுள்ளது.


No comments