4 கைத்துப்பாக்கிகள் 8 ரவைக்கூடுகள் மீட்பு!

கல்கிஸ்ஸ இந்திகாதெனிய பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரவைக்கூடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டது.

இதன்போது வனப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த 4 கைத்துப்பாக்கிகளும், 8 ரவைக்கூடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு கால்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments