யாழில் சவேந்திரசில்வா:பல்கலை சூழலில் கத்திக்குத்து?


இலங்கையில் கொரோனா தொற்று முற்றாக ஒழியவில்லை.அதனால் வடக்கு மக்களும் பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது அவசியம் என இலங்கை இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் சவீந்திரசில்வா என தெரிவித்துள்ளாராம்.

புங்குடுதீவில் இன்று வடக்கு ஆளுநர் சகிதம் வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் அவர் பங்கெடுத்திருந்தார்.

இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட சிங்கள மாணவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் மாணவர்கள் தங்கும் விடுதியில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

அதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விஞ்ஞான பீட இறுதி ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டனர். 

No comments