தேர்தலின் பின்னரே பாடசாலை?


கொரோனா வைரசுக்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சு ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வரை பாடசாலைகளை மூடிவைத்திருக்குமாறு கல்வியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது என தகவல் கிடைத்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல்கள் முடியும் போது, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு கருதுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

No comments