சுமந்திரனை மக்கள் நிராகரிப்பர்: கஜேந்திரகுமார்?

சுமந்திரனின் பொய் காரணமாக அவரை மக்கள் நிராகரிப்பர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (24) இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்,“தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு சுமந்திரன் தோல்விடைவார். இவர் கட்சியின் தலைவரினால் கூட நிராகரிக்கப்பட்டவர். இவருடன் நான் எப்படி விவாதத்திற்கு சென்று மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

நான் ஒரு கட்சியின் தலைவர். சுமந்திரன் என்னுடன் விவாதிப்பதற்கு தகுதியற்றவர். இவருடன் பல இடங்களில் விவாதித்துள்ள நிலையில் தனது முகத்தை தற்போது ஒளித்துக்கொண்டு திரிகின்றார். அத்துடன் தப்புவதற்கான சில வழிகளை தேடி வருகின்றார்”  என்றார்

No comments