கடைக்குள் உழுத உழவு இயந்திரம்- ஒருவர் பலி?

வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் இன்று (08) நண்பகல் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பண்டத்தரிப்பு - வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்னன் இராஜதுரை (வயது-65) என்ற முதியவரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்தில் சாப்பாடு எடுத்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியை ஓட முற்பட்ட முதியவரை எதிரே வந்த உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

அத்துடன் உழவு இயந்திரம் சம்பவ இடத்திலிருந்த கடை ஒன்றுக்குள் புகுந்தது இதன்போது கடையில் இருந்த பெண் மயிரிழையில் உயிர் தப்பினார்.

சம்பவத்தை அடுத்து உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments