கோத்தா போக்கு சரியில்லை:சித்தர்!


கோத்தா அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை  முன்னெடுத்து வருகின்து. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென எச்சரித்துள்ளார் அவரது நண்பரான த.சித்தார்த்தன். 

இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல விடயங்கள் தமிழ் மக்களுக்கு விரோதமாகவே இருக்கின்றன. இன்றைய சூழலில் நடக்கின்ற பல சம்பவங்கள் இதற்கு எடுத்துக் காட்டாகவும் இருக்கின்றன.

இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்குமென்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக இருக்கலாம். ஆனால் அத்தனைய சம்பவங்கள் இடம்பெறுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதே போல கடந்த ஆட்சிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

ஆகவே இன்றைய ஆட்சியாளர்களும் அதே நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தமிழர்களுக்கு விரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக நாங்கள் எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தேசிய கீதத்தை தமிழில் பாடமாட்டோம் என்பது, தமிழர் உரிமை சார்ந்து கதைக்கின்ற தரப்பினர்களை விசாரணைக்கு அழைப்து, தமிழர் உரிமை சார்ந்;த விடயங்களை மறுப்பது, உள்ளிட்ட பல விடயங்கள் இன்றைக்கு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009இற்கு முன்னராக கோத்தாவின் நண்பராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments