நாளை நாடாளுமன்றை முற்றுகையிடுகின்றனர்

பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவர்கள் நாளைய (திங்கட்கிழமை) தினம் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த மாணவர்கள் பேரணியாக செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அவர்கள் பேரணியாக செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

No comments