சிறுபான்மை இனம் என அழைப்பதை விரும்பாத சஜித்


இலங்கையில் அனைத்து மக்களுக்குள் சமமான உரிமையை ஏற்படுத்துவது தான் தனது நோக்கம் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (11) காலை தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கொழும்பு இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிசார்ட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்,

சிறுபான்மை இனங்கள் என்று விளிப்பதைக் கூட நான் விரும்பவில்லை. அனைத்து இன மக்களுக்கும் ஒரே வகையில் செயற்படும் திட்டங்களை நான் வைத்துள்ளேன். எல்லோருக்கும் ஒரே நீதி என்பதே எமது கொள்கை.

இனவாத ரீதியான செயற்பாடுகளுக்கு நான் இடமளியேன். எனது தந்தையார் காலத்தில் கூட நாங்கள் அனைத்து இனத்தவரையும் அரவணைத்தே செயற்பட்டோம். பெரும்பான்மை சிங்கள மக்களின் எண்ணப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்களுக்கு உண்மை நிலையை சொல்ல வேண்டும். அதனை நான் செய்வேன்.

தமிழ் ஊடகங்கள் எனது பயணத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் - என்றார் சஜித்.

No comments