தர்மலிங்கத்தின் 34ம் ஆண்டு நினைவேந்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 34 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் அக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் அஞ்சலி நிகழ்வும் அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.
இதன் போது அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நிறைவுத் தூபிக்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

No comments