மறவன்புலோ சச்சிதானந்தன் யதார்த்தத்தை புரியட்டும்?


தமிழ் அரசியல் கைதிகளான குற்றமும் இழைக்காத பல தமிழ் இளைஞர்கள் பல ஆண்டுகாலமாக சிறையில் தமது இளமைக்காலத்தை தமது வாழ்வியலை தொலைத்துக் கொண்டு இருக்கையில் அது பற்றி என்றைக்குமே பேசாத சிவசேனை தலைவர் சச்சியானந்தன் இன்று பொதுபல சேனையைச் சேர்ந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டதனை வரவேற்று பாராட்டி வாழ்த்தியிருப்பது எதற்காகவென யாழ்.மாநகர சபை உறுப்பினர வ.பார்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் 'சைவசமயத்தை அழிப்பதில் இருந்து காக்க பொதுபல சேனை சைவர்களுக்கு துணை நிற்கும் என்கிறார்.வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்த்தால் சிங்கள பௌத்த பேரினவாதம் தான் இந்த மண்ணிலே இன அழிப்பிற்கு வித்திட்டது. இங்கு இனஅழிப்பு என்பது வெறுமனே உயிர்களைக் கொல்லுதல் மட்டும் ஆகாது. எமது பாரம்பரியங்களை தொன்மையை அழித்தாலும் அதுவும் இனஅழிப்பு தான். எத்தனையோ இந்து கோவில்களுக்கு முன்னால், எல்லாவற்றையும் துறந்து துறவியாக சென்ற புத்தரின் பெயரால் ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகின்றன. அவ்வாறு இருக்கையில் சச்சியானந்தன் கூறுகின்ற சைவர்களுக்கு எவ்வாறு துணைநிற்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் கூட கன்னியா பிள்ளையார் கோயில் நிலத்தில் பௌத்த விகாரை கட்டுவது தொடர்பான பிரச்சினை நடைபெற்று வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் பல புனைவுகளும் கற்பனைகளும் நிறைந்த மகாவம்சத்தினை வைத்து தமது சரித்திரத்தை நிறுவுகின்ற சிங்களப் பேரினவாதம் தாங்கள் கூறிகின்ற சைவத்தையும் எமது மண்ணின் மரபையும் காப்பதற்கு முயற்;சி செய்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சச்சியானந்தன் முதலில் சிறையில் வாடும் எமது தமிழ் இளைஞர்களின் நிலை கண்டு கவலைகொள்ளுங்கள் அவர்களின் விடுதலையை வலியுறுத்துங்கள். பின்னர் ஞானசாகர தேரர் விடுதலையைப் பாராட்டுக்கள் குதுகலியுங்கள் எனவும் த.தே.ம.முன்னணி உறுப்பினரான வ.பார்த்தீபன் கருத்து வெளியிட்டுள்ளார்;.

No comments