குண்டுவெடிப்புத் தொடர்பில் அல்ஜீரிய நாட்டவர் நால்வர் கைது!

கடந்த வாரம் பிரான்சின் தென்கிழக்கு நகரமான Lyon இல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் அல்ஜீரிய நாட்டைச்  சேர்ந்த நான்கு  பேரை பிரெஞ்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதில் 24 வயதான அல்ஜீரிய நாட்டை சேர்ந்த இந்த சந்தேக தீவிரவாதி மற்றும் அவனின் நண்பன்  அல்ஜீரிய நாடடவரான தகவல் தொழில்நுட்பத்துறை  மாணவனுடன் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படங்களை காவல்துறையினர் விளியிடத்தை அடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் நடந்த இந்த குண்டுவெடிப்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட13 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments