முல்லையில் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி!


முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தி வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் காவல்துறை மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பலவும் குரல் எழுப்பி வந்திருந்த போதும்; எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை தற்போதும் தொடர்ந்து வருகின்றது.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 7ம் திகதியன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்பு பேராட்டத்தை அறிக்கையிட்ட ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.

நாளை இலங்கையில் அரச விடுமுறையாக உள்ளபோதும் விசாரணைக்கென அழைத்து அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்ட போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் தனது கைபேசியில்  ஒளிப்படம் எடுத்திருந்தார்.அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை குறித்த நபர்இடத்தினை விட்டு தப்பி ஓடியிருந்தார்.இதன் போது ஆர்ப்பாட்டகாரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான்கடற்படை அதிகாரி என nதிவித்திருந்தார்.

இன்னிலையிலேயே குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளரான சண்முகம் தவசீலன் என்பவரை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தவசீலனை காவல்துறையினர்; நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் குறித்த ஊடகவியலாளர் அளம்பில்பகுதியில் துயிலும் இல்ல காணிவிவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற வேளை படையினரால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.இந்நிலையில் தற்போது அவரை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments