யாழில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 10 பேர் கைது

கஞ்சா போதைப் பொருளை புகைத்துக் கொண்டிருந்த 10 பேருக்கு 2 மா தங்கள் சிறை தண்டணை விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ. எஸ்.பீற்றா் போல் தீா்ப்பு வழங்கியுள்ளாா். 
ஒரு கிராமுக்கும் குறைவான கஞ்சாவை உடமையில் வைத்திருந்த 9 போின் தண்டனைக் காலம் 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், ஒரு கிராமுக்கு அதிகமான அளவில் கஞ்சாவை வைத்திருந்த ஒருவரின் 
தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து நீதிமன்று கட்டளையிட்டது.அத்துடன், குற்றவாளிகள் 10 பேரும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் தண்டம் பணம் செலுத்தவும் மன்று உத்தரவிட்டது. 
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா போதைப் பொருளை நுகர்வதற்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை 7 பேரும் செவ்வாய்க்கிழமை 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 
அவர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். 
அதனால் அவர்களை எச்சரித்த நீதிமன்று, தண்டனைத் தீர்ப்பை வழங்கியது.

No comments