நாயாறு விகாரை சட்டவிரோதம்: அம்பலமாக்கிய தகவல் அறியும் உரிமை!


முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்மாணம் சட்டவிரோதமானதென்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் முல்லைதீவு ஊடகவியலாளர் ஒருவர். 

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14 ஆம் திகதி அன்று அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.

இந்நிலையில் இந்த முறுகல் நிலை தொடர்பாக  அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்தவகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு இருதரப்பினருக்கும் முல்லைத்தீவு மாவட்ட  நீதிமன்றம் அழைப்புவிடுத்திருந்தது.

எனினும் குறித்த புத்தர் சிலையினை விரைவில் திறக்க பௌத்த மதகுரு முற்படுவதை உணர்ந்து  அவசர நிலைமையாக கருதி  ஆலய நிர்வாகத்தினர் மற்றும்,தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம் அது தொடர்பன வழக்கு கடந்த 22ம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கு விசாரணைகளில், குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்பது, தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராமமக்களின் சார்பில் ஆஜரானவர்களினால் வெளிப்படுத்தப்பட்டது.

அத்தோடு கடந்த பொங்கல் வழிபாட்டின் போது குறித்த பிக்குவால் வழிபாடுகளுக்கு சென்ற தமிழ்மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தபட்டிருந்தமையும் புகைப்படங்கள் ஆதாரம்மூலம் காண்பிக்கபட்டது.

இதனடிப்படையில் இன்றையதினம் (24) இருதரப்பினரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்று கட்டளை பிறப்பித்திருந்தது .

இந்த நிலையில்  நேற்றையதினம்  பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் பூரண  ஆதரவுடன் பெரததெனியா பல்கலைகழக பேராசிரியர் கலாநிதி  கபில குணவர்த்தன மற்றும் புல்மோட்டை அரிசிமலை பகுதியில் விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்குககளின் பங்குபற்றலுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை  திறந்து வைக்கப்பட்டுள்ளது .

No comments