யாழ் கொண்டுவரப்பட்ட 7000 போதை இனிப்புக்கள் - ஓமந்தையில் சிக்கியது

போதை கலந்த இனிப்பு பண்டங்களை வவுனியா ஓமந்தை பொலிஸார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர். அதனை கொண்டு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன.

போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்பு பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வரக்காபொல பகுதியைச் சேர்ந்த நபர்கள் என்றும் அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் இனிப்பு பண்டங்களை இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments