ரணிலும் அரசியலமைப்பை மீறிவிட்டார் - சாடுகிறது ஜேவிபி


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பை மீறிவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும். எனினும் 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலை அம்பலப்படுத்த வேண்டும். இந்த நிலையில் அரசமைப்பை பிரதமரும் மீறியுள்ளார்.

எவ்வாறாயினும், அரசமைப்பை பாதுகாப்பதற்காக நாங்கள் கடந்த சில நாள்களாக பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments