எட்டு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் எட்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் பாம்பன் , ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்களும் நேற்றிரவு நெடுந்தீவு , கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டவேளை கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் இன்று மதியம் ஒப்படைத்தனர்.
எட்டு மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுதுவதற்கான நடவடிக்கைகளை நீரியல் வளத்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் , அவர்களை கடற்படையினர்


கட்டுப்படுத்தவில்லை எனவும் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாணத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டிருந்தனர்.

அது தொடர்பில் தான் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments