தனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திர அட்மிரல்


கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். 

சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இதனை உறுதி செய்துள்ளார்.

11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சிக்கு கடற்படை தளம் ஒன்றில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அளித்தார், தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த விசாரணைகளின் முக்கிய சாட்சியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் நேற்று அச்சுறுத்தப்பட்டார்.

கடற்படை உணவகத்தில் நேற்று பிற்பகல், லெப்.கொமாண்டர் லக்சிறி இருந்த போது அங்கு சென்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் ஏனைய ஐந்து கடற்படை அதிகாரிகளும் அவரை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முற்பட்டனர்.

அவரைத் துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவேன் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கோட்டே காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்மை அவர்கள் பிடிக்க முனைந்ததாகவும், எனினும் தான் தப்பி வந்து விட்டேன் என்றும், லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இவர் தாக்கப்பட்டதாக, கடற்படை அதிகாரிகள் கூறியுள்ள போதும், முறைப்பாட்டில் அச்சுறுத்தப்பட்டதாகவே கூறப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது.

No comments