கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் கொள்ளை


வவுனியாச் சம்பவத்தில் வீடு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான பேரம்பலம் வசந்தகுமார் என்பவரது வீட்டில் ஆட்கள் இல்லாத வேளையில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா ரொக்கப் பணத்தையும், ஏழு பவுண் தங்க நகைகளையும், தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வீட்டு ஆவணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உரிமையாளராகிய வசந்தகுமாரின் காணியை அபகரிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமித்திருக்கும் நபர் ஒருவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு முன்னிலையாக சென்றிருந்த நேரத்தை பயன்படுத்திய திருடர்கள் சூட்சுமமான முறையில் வசந்தகுமாரின் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.



இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வவுனியா தடவியவியல் பொலிசாருடன் இணைந்து கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments