காலியாகும் திண்ணைக்கு காத்திருந்த கூட்டம்


வடமாகாண சபையின் ஆயுட்காலம் நேற்றுமுன்தினம் 24 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் நேற்று முதல்  வடக்கு மாகாணம் ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் ஆட்சில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் எப்போது முடிவடையும் எனக் காத்திருந்து ஆளுநரின் படங்களை தயார் செய்துவைத்திருந்த பல அலுவலகங்கள் நேற்றே முதலமைச்சரின் படத்தை அகற்றிவிட்டு ஆளுநரின் படத்தினை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை தங்களின் ஆளுநர் விசுவாசத்தைக் காட்டி அரசியல் ரீதியான பதவி உயர்வுகள், சலுகைகள் போன்றவற்றைப் பெறும் கைங்கரியங்களிலும் சில அதிகாரிகள் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஒரு நடவடிக்கையாக தெடர்ச்சியாக அவர்கள் ஆளுநருடனான சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments