சிறிலங்காவில் பொலிசின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு

இரத்தினபுரி - கல்லெந்த விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விசாரணை ஒன்றுக்காக இரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த தேரர் கைக்குண்டொன்றை எடுத்து வந்துள்ள நிலையில் அவரின் கையின் மீது தாக்குதல் மேற்கொண்டு அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments