கோயில் குதிரையை காணோம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியிலுள்ள ஆலயமொன்றிலிருந்து தெய்வ வாகனம் ஒன்று திருடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கரணவாய் வடக்கு கரவெட்டியில் உள்ள சக்களாவத்தை ஞான வைரவர் ஆலயத்தின் குதிரை வாகனமே நேற்று முந்தினம் இரவு களவாடப்பட்டுள்ளது.

இதனை குறைந்தது 8 தொடக்கம் 10 பேர் வரை காவமுடியும் என ஊரைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் அதிகாலை நேரத்திலேயே இந்த பாதகச் செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

குறித்த குதிரை வாகனம் பாரமானதாகவும் விசாலமானதாகவும் விளங்குவதால் கன்டர் ரக வாகனம் ஒன்றைக் கொண்டுவந்தே ஏற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

பல வருடங்கள் பழமை வாய்ந்த வாகனமாக இது விளங்குவதால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.

யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தின் தொன்மையான ஆலயங்கள் பலவற்றிலிருந்து களவாடப்பட்ட ஆலய வாகனங்களும் சிற்பங்களும் தென்னிலங்கையிலுள்ள உல்லாச விடுதிகள் பலவற்றில் அலங்காரமாக பயன்படுத்தப்படுகின்றன.

குறித்த களவாடல்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கை

No comments