சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு




சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி சிவநேஸ்வரன் றெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த மாணவி இன்று பாடசாலை சென்றுவிட்டு 1.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அந்த நேரம் பெற்றோர், சகோதரர்கள் வீட்டில் இருக்கவில்லை.
2 மணியளவில் வீட்டுக்கு வந்த பெற்றோர் சிறுமியின் புத்தகப்பை வீட்டில் இருப்பதை பார்த்து சிறுமியை தேடியுள்ளனர்.



3.40 மணியளவில் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம் கழுத்தில் காணப்படுவதுடன் நெற்றியிலும் காயம் காணப்படுகிறது.

வட்டுக்கோட்டை பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments