புலிகளை அழித்து வெற்றி பெறுவதற்கு 5 நாடுகள் உதவின - சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 5 நாடுகளும்  விடுதலைப் புலிகளை அழிக்க உதவின. இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைத்தது.

No comments