கலவரத்தில் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைக்க மத்திய கலாச்சார நிதியத்தினூடாக நடவடிக்கை


அண்மையில் இடம்பெற்ற கண்டி வன்முறையின் போது சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியை வழங்க மத்திய கலாச்சார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,19 வணக்கஸ்தலங்களின் புனருத்தாரண பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழவு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தலைமையில் .பத்தரமுல்ல ‘அப்பே-கம’ வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான சசுனோதய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புனருத்தாரணப் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments